கொலம்பியாவில் 2 நாட்கள் நடைபெறும் பண்பாட்டுத் திருவிழா

கொலம்பியாவின் பஸ்தோ நகரில் பண்பாட்டுத் திருவிழாவில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் கலைஞர்களின் நடனமும் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன.

தென்னமெரிக்க நாடான கொலம்பியாவின் பஸ்தோ நகரில் ஆண்டுதோறும் பண்பாட்டுத் திருவிழா நடத்தப்படுகிறது.ஆண்டிஸ், அமேசான், பசிபிக் பண்பாடுகளின் கலப்பாகத் தோன்றும் இந்த விழா 2நாட்கள் நடைபெறுகிறது.

பல வண்ணங்களுடன் பெரிய உருவங்களைச் செய்து ஊர்திகளில் வலம் வந்ததும், பல்வேறு வேடங்களை அணிந்த கலைஞர்கள் இசைக்கேற்ப நடனமாடியதும் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *