பத்திரிக்கையாளர் கசோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது.
துருக்கியின் இஸ்தான்புலில் உள்ள சவுதி அரேபியத் தூதரகத்துக்குச் சென்ற பத்திரிக்கையாளர் கசோகி கொடூரமாக கொல்லப்பட்டார். இந்நிலையில், அதுகுறித்து துருக்கி அதிகாரிகள் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, கசோகி தூதரகத்துக்குள் நுழைந்த உடனேயே அவரது கழுத்து நெறிக்கப்பட்டிருக்கும் என்றும், அவரது உடல் பாகங்கள் கிடைக்காததால், தூதரகப் பணியாளர்களால் அங்கேயே ஆசிட் ஊற்றி எலும்பு கூட மிஞ்சாத வகையில் அழித்திருக்கக் கூடும் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.