சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ஜப்பான் தனது திமிங்கல வேட்டையைத் தொடங்கியுள்ளது.
திமிங்கலங்களை வேட்டையாடி அதன் மூலம் அன்னியச் செலாவணியை ஜப்பான் ஈட்டி வருகிறது. இதன் காரணமாக திமிங்கலங்களின் எண்ணிக்கை கடும் சரிவை சந்தித்தன. இதையடுத்து திமிங்கல வேட்டைக்கு 88 நாடுகள் தடை விதித்தன. இந்நிலையில் திமிங்கல வேட்டையை நிறுத்தியதால் தங்கள் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய ஜப்பான், மீண்டும் வேட்டையைத் தொடங்கப் போவதாக கடந்த மாதம் அறிவித்தது.
இந்நிலையில், திடீரென சர்வதேச திமிங்கல வேட்டை எதிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகிய ஜப்பான், திமிங்கல வேட்டையை உடனடியாகத் தொடங்கியுள்ளது.