RBI-யிடமிருந்து ரூ.3.60 லட்சம் கோடி கேட்டு மத்திய அரசு நெருக்குதல் – ராகுல்காந்தி குற்றச்சாட்டு

ரிசர்வ் வங்கியிடமிருந்து 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயைக் கேட்டு மத்திய அரசு நெருக்குதல் அளித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமர் மோடியின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள குழப்பத்தைத் தீர்க்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறியுள்ள ராகுல்காந்தி, இதற்கு நாட்டு மக்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு ட்விட்டர் மூலம் கேட்டுக் கொண்டுள்ளர். தன்னிச்சையான அமைப்புகளை மோடி அரசு அழித்து வருவதாக குற்றம் சாட்டிய அவர், நாட்டின் பொருளாதார நிலைமையை பாதுகாக்க  வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *