பிரசவத்தின் போது குழந்தையை இரு துண்டாக்கிய ஆண் செவிலியர் கைது

ராஜஸ்தானில் பிரசவத்தின் போது குழந்தையை இரு துண்டாக்கிய ஆண் செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிறன்று, அரசு மருத்துவமனையில், கர்ப்பணிக்கு கடினமான பிரசவம் என அறிந்தும் மருத்துவரை அழைக்காமல் ஆண் செவியிலர் அம்ரித் லாலே பிரசவம் பார்த்துள்ளார்.

குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தையை முரட்டுத்தனமாக கையாண்டதால், சிசுவின் தலை மட்டும் கருப்பைக்குள் தனியே சிக்கிவிட, குழந்தையின் உடல் பாகம் கையோடு வந்து துண்டானது.

இதை மறைக்க முயற்சித்த செவிலியர் அம்ரித் லால், சக செவிலியர் ஜுஜ்ஜார் சிங்குடன் சேர்ந்து குழந்தையின் உடலை பிணவறையில் வைத்துவிட்டு, கர்ப்பிணி ஆபத்தாக இருப்பதாகவும் வேறு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லுமாறும் அறிவுறுத்தினர்.

வேறு மருத்துவமனையில் குழந்தையின் தலை மட்டும் கருப்பையில் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அதனை அகற்றினர். இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆண் செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளார். உதவிய மற்றொரு செவிலியர் தலைமறைவாகிவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *