ஜி.எஸ்.டியில் குறைகள் களையப்பட வேண்டியது அவசியம் – பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத்

ஜி.எஸ்.டி. நடைமுறையில் உள்ள குறைகள் களையப்பட வேண்டியது அவசியம் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.

செய்தியாளரிடம் பேசிய அவர், இந்தியாவில் மறைமுக வரி வருவாய் எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாகவே வருவதாகவும், ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்துவதில் உள்ள சில குறைகளை சீரமைப்பதன் மூலம் அதனை சரிசெய்ய முடியும் என்றார்.

ஜி.எஸ்.டி.யை முறைப்படுத்துவதற்கான பணிகளை இந்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்தியாவில் விவசாயத்துறையை மேம்படுத்த கடன் தள்ளுபடியோ, மானியமோ அவசியமில்லை என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *