கைரேகை மூலம் வாட்ஸ் ஆப் பயனாளரை உறுதிப்படுத்தும் வசதி விரைவில் அறிமுகம்

வாட்ஸ் ஆப்-ல் கைரேகை மூலம் உரியவர்தான் பயன்படுத்துகிறாரா? என உறுதிப்படுத்திய பின் குறுஞ்செய்திகளைப் பார்க்கும் வசதியை ஆன்ட்ராய்டில் விரைவில் கொண்டுவர வாட்ஸ் ஆப் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வாட்ஸ் ஆப் பயனாளர்கள், அவர்களது மொபைலில் உள்ள குறுஞ்செய்திகளை அவர்கள் மட்டுமே காண ஏதுவாக ஆப் முழுமைக்குமான பாதுகாப்பு பரிசோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, உரிய பயனர்தான் ஆப்-ஐ திறக்கிறாரா என்பதை உறுதிப்படுத்த கைரேகை பதிவு பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

கைரேகை பதிவு உணர்திறன் கொண்ட ஆன்ட்ராய்டு மார்ஸ்மல்லோ ((Marshmallow))-வில் இது முதற்கட்டமாக அமலுக்கு வரும் என்றும், அதன் பின் ஐ.ஓ.எஸ்., உள்ளிட்ட இயங்குதளங்களில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *