காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்ட 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்ட 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சோபியான் மாவட்டத்தில் உள்ள சப்நகரி என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து குறிப்பிட்ட பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடியில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். வேறு தீவிரவாதிகள் யாரும் மறைந்துள்ளனரா என்று பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *