காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு அவமதிப்பு செய்தவரை காவல்துறை கைது செய்துள்ளது. உத்தர பிரதேசத்தில் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தன்று அகில பாரத இந்து மகா சபையின் தேசியச் செயலாளர் பூஜா பாண்டே காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டார்.
மேலும், அவருடன் இணைந்து 13 பேர் கொண்ட கும்பல் காந்தியை சுட்டுக்கொன்ற கோட்ஸேவை தேசத்தந்தை எனக் கூறி கோஷம் எழுப்பினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர்கள் 13 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அலிகார் காவல்துறை பூஜா ஷாகுன் பாண்டேவையும் அவரது கணவர் அசோக் பாண்டேவையும் அதிரடியாக கைது செய்துள்ளது.