எந்த ஒரு வெளிநாட்டு விமான தயாரிப்பு நிறுவனத்தின், உதிரி பாக தயாரிப்பாளராக இருக்க, எப்போதும், தாங்கள் போட்டியிடுவதில்லை என ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஆர்.மாதவன் தெரிவித்திருக்கிறார்.
முழுமையான விமான தயாரிப்பு தொழில்நுட்பத்தை தங்களிடம் பகிர்ந்துகொண்டால், அதன் அடிப்படையில் மட்டுமே, ஒப்பந்தங்களை மேற்கொண்டு, போர் விமானங்களை தயாரித்து நாட்டிற்கு அளித்துவருவதாகவும் அவர் விளக்கமளித்திருக்கிறார்.
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடனான ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில், பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் நீக்கப்பட்டு, ரிலையன்ஸ் நிறுவனம், வலிந்து சேர்க்கப்பட்டிருப்பதாக, காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
இந்த சூழலில், இன்று, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவன மேலாண் இயக்குநர் மாதவன் அளித்துள்ள பேட்டி, ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.