ஒடிசா மாநிலக் கடற்கரையோரத்தில் சுமார் 12 டன் எடையுள்ள பிரம்மாண்ட திமிங்கலம் இறந்து கரையொதுங்கியுள்ளது. கேந்திரபாரா மாவட்டத்துக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கியுள்ள இந்த அரிய வகை திமிங்கலத்தின் உடலில் காயங்கள் இருப்பதால் கப்பல் உள்ளிட்டவற்றின் ப்ரொப்பெல்லர் கருவிகளால் தாக்கப்பட்டு இறந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
சுமார் 40 அடி நீளமுள்ள இந்த திமிங்கலத்தின் உடலை கிரேன் மூலம் அப்புறப்படுத்தவும் உடற் கூறு பரிசோதனை செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.