வைக்கோலைத் தீவைத்து எரிப்பதை யாராலும் தடுக்க முடியாது எனப் பஞ்சாப் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியைச் சுற்றியுள்ள பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேச மாநிலப் பகுதிகளில் விவசாயிகள் அறுவடைக்குப் பின் வைக்கோலைத் தீவைத்து எரித்து வருகின்றனர். இதனால் டெல்லியில் புகைமூட்டம் சூழ்ந்து காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. எனவே வைக்கோலைத் தீயிட்டு எரிக்க வேண்டாம் என விவசாயிகளை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மீறித் தீவைப்பவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இதையும் மீறி வைக்கோலைத் தீயிட்டுக் கொளுத்தும் விவசாயிகள், தங்களை யாராலும் தடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர். வைக்கோலை எரித்தது தொடர்பாகப் பஞ்சாப் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நவம்பர் 1வரை 21ஆயிரம் வழக்குகள் பதிந்துள்ளது.