தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அணையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக சீரமைக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வலியுறுத்தியுள்ளார்.
தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான அணை, சில இடங்களில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் கசிந்து வருகிறது. இதை சீரமைக்க, கோரிக்கை வலுத்துள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அணையை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், சுற்றுப்பகுதி கிராமங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவையை கவனத்தில்கொண்டு அணை சீரமைப்புப் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.