வட கேரளம் மற்றும் அதனை ஒட்டியுள்ள அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை அல்லது கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இரவு நேரங்களில் நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. பிற்பகல் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.