பீகார் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆபாச வாசகங்களை எழுதிய மாணவர்களை தட்டிக்கேட்ட, 30க்கும் மேற்பட்ட மாணவிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்பாங்கா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியின் சுவரில் சில மாணவர்கள் சேர்ந்து மாணவிகளை பற்றி ஆபாச வாசகங்கள் எழுதியுள்ளனர். இதைக் கண்ட மாணவிகள் அதை உடனடியாக அழித்துள்ளனர். இருந்தாலும் தொடர்ந்து அந்த மாணவர்கள் ஆபாச வாசகங்களை எழுதிவந்துள்ளனர். இவர்களில் ஒருவனான மோகன் என்பவனை மாணவிகள் அழைத்து கண்டித்துள்ளனர். தனது தாயாரையும், வேறு சில பெண்களையும், உறவினர்களை அழைத்து வந்த அந்த மாணவன், அவர்களை விட்டு தாக்குதல் நடத்தியுள்ளான்.இதில், 30க்கும் மேற்பட்ட மாணவிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 14 பேர் தவிர எஞ்சியவர்கள் வீடு திரும்பியிருப்பதாக, போலீசார் கூறியுள்ளனர்.
2018-10-08