கர்நாடக மாநிலம் கலபுராகி பகுதியில் நடிகர் பிரகாஷ் ராஜின் காரை வழிமறித்து பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவை வேருடன் களையும் வரை தாம் எதிர்ப்புக் குரல் கொடுக்கப் போவதாக பிரகாஷ் ராஜ் தெரிவித்ததையடுத்து இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. காரை சூழ்ந்துக் கொண்ட 20க்கும் மேற்பட்டவர்கள் பிரகாஷ் ராஜை தாக்க முற்பட்டனர். இதையடுத்து போலீசாரின் உதவியுடன் பிரகாஷ்ராஜ் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்.