திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் லாரி உரிமையாளரை அடித்துக்கொன்றுவிட்டு பணத்துடன் தலைமறைவான அதன் ஓட்டுநர் 18 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசாரிடம் பிடிபட்டுள்ளான்.
கடந்த 2000ஆவது ஆண்டு கும்மிடிப்பூண்டி சிப்காட் ஏரிக்கரை பகுதியில் லாரி உரிமையாளரான தவர்சிங் என்பவரது உடல் அடித்துக் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டது. விசாரணையில், பணத்துக்காக தவர்சிங்கின் லாரி ஓட்டுநர் அப்துல் சலீமும் கிளீனர் பிரேம்சந்துமே அவரைக் கொன்றது தெரியவந்தது. பிரேம்சந்த் உடனடியாக பிடிபட்டுவிட, அப்துல் சலீம் தலைமறைவானான். இந்த நிலையில் அவன் மகாராஷ்டிராவில் ஒளிந்திருப்பது தெரியவந்ததை அடுத்து அங்கு விரைந்த போலீசார், 18 ஆண்டுகள் கழித்து அவனை கைது செய்து அழைத்து வந்தனர்.