நாங்கள் கேட்பது காவிரி நீரப்பா; நீங்கள் தருவதோ கர்நாடக சூரப்பா: நடிகர் விவேக் டுவிட்!

நாங்கள் கேட்பது நீரப்பா!.. நீங்கள் தருவதோ சூரப்பா என்று அண்ணா பல்கலைகழக துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளதை விமர்சித்து நடிகர் விவேக் கவிதை வடிவில் ட்வீட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தச் சூழலில் அண்ணா பல்கலைகழகத்துக்கு கர்நாடகவைச் சேர்ந்த சூரப்பாவை துணைவேந்தராக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்திருருக்கிறார்.

கர்நாடகத்தைச் சேர்ந்தவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளது  குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில்,

‘‘நாங்கள் கேட்பது நீரப்பா!

நீங்கள் தருவதோ சூரப்பா!

அண்ணன் தம்பிகள் நாமப்பா!

நம்மைப் பிரிப்பது நீராப்பா?

அப்பப்பப்பா போதும்ம்ம்ம்ம்பா!

அன்னைக் காவிரி வேணும்ப்பா” என்று பதிவிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *