அரசு ஊழியர்களின் ஜனநாயக உரிமையை நசுக்குகின்றது எடப்பாடி அரசு
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்ற 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் சென்னையில் இன்று தலைமை செயலாகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
ஜனநாயக ரீதியான இந்த போராட்டத்தை முடக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் ஆசிரியர்களையும், ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளையும் நள்ளிரவில் வீடு புகுந்து கைதுச் செய்து போராட்டத்தை முடக்க முயற்சித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இதன் மூலம் அரசு ஊழியர்களின் ஜனநாயக உரிமைகளை எடப்பாடி அரசு நசுக்கியுள்ளது.
கைதுச் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களை உடனடியாக விடுதலைச் செய்ய வேண்டுமென்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன். ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் நியாயமான 4 அம்ச கோரிக்கையை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்றி தர வேண்டுமென்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.