திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகேயுள்ள பூமலூர் பகுதியில் 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து கொன்ற தாய் தானும் தீவைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
ஊராட்சி முன்னாள் தலைவரான செந்திலுக்கும் அவரது மனைவி சிவரஞ்சனிக்கும் இடையே குடும்பத்தகராறு இருந்துவந்ததாகவும், இதன் காரணமாக அதிகாலை 3 மணிக்குத்தான் செந்தில் வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், செந்திலுக்கும், சிவரஞ்சனிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு சண்டை முற்றிய நிலையில், 8 மாத குழந்தையான ஹர்சிதா, மற்றும் 5 வயதுடைய தர்சத் ஆகியோரை தண்ணீர் தொட்டியில் தூக்கிவீசி மூழ்கடித்து கொன்ற சிவரஞ்சனி, தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்துக்கொண்டு தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தற்கொலைக்கு முயன்றார்.
தகவலறிந்த அக்கம்பத்தினர் தண்ணீர் தொட்டிக்குள் இறந்துகிடந்த இரு குழந்தைகளையும், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிவரஞ்சனியையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து மங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.