டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்திக்கவுள்ளார். அப்போது, தமிழக வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை 11 மணிக்கு டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். அப்போது, தமிழக அரசின் பல்வேறு நலத்திட்ட கோரிக்கை தொடர்பாக அவர் சந்திக்கலாம் என்றும் கட்சி விவகாரம் குறித்து அப்போது பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக, நேற்றிரவு 7.30 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்ற அவருடன், கே.பி முனுசாமி, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் சென்றுள்ளனர்.