சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் அக்கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்கள் மற்றும் மாவட்ட நெறியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழகத்தில் தலித் மக்கள் மீதான தொடர் தாக்குதல்கள், மதவாத சக்திகளின் வன்முறை போக்கு, பேருந்து கட்டண உயர்வு, நீட் தேர்வை எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆலோசனை நடத்தினார். மேலும் இக்கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதனையடுத்து கூட்டத்தின் முடிவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
2018-02-09