சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என நடிகர் பிரபு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு புதியதாக நிறுவியுள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தின் திறப்பு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு திறந்து வைக்கவுள்ளார். பலரது வேண்டுகோளை ஏற்று இந்த ஏற்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார். ஏற்கனவே தான் ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் ஏராளமான உள்ளதால் தன்னால் பங்கேற்க முடியவில்லை என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரபு, சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டுவது ஜெயலலிதாவின் கனவாக இருந்தது என்றும் ஆனால் அவர் இப்போது இல்லாத நிலையில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திறந்து வைப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தெரிவித்தார். மேலும், இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் பங்கேற்க வேண்டும் என்பது எங்களது குடுமபத்தினரது விருப்பம் என்று பிரபு கூறினார்.