சானமாவு வனப்பகுதியில் இரவு வேளையில் சுற்றித்திரியும் காட்டுயானையின் அட்டகாசம்

ஓசூர் சானமாவு வனப்பகுதியில் சுற்றி வரும் காட்டு யானை ஒன்று அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை சேதம் செய்துள்ளது.

இதனால் நிலத்தில் பயிரிட்ட ராகி, தக்காளி போன்ற பயிர்கள் பல லட்சம் ரூபாய் அளுக்கு கடும் நட்டத்தை ஏற்படுத்தியதாக விவசாயிகள் தெரிவித்தனர்.கடந்த 3 மாதங்களாக இங்கு சுற்றித்திரிந்த 6 காட்டுயானைகளில் 5 யானைகள் ஒரு குழுவாக செட்டிப்பள்ளி வனப்பகுதியில் நடமாடுகின்றன.

இதில் ஒரு யானை மட்டும் இரவு நேரங்களில் தனியாக போடூர் அருகே பயிர்களை சேதம் செய்து வருகிறது. கல்குவாரி குடியிருப்பில் புகுந்த இந்த யானை அங்கிருந்த வீட்டுக் கதவையும் சேதப்படுத்தியது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *