சபரிமலையில் அனைத்து வயது பெண் பக்தர்களைஅனுமதிக்க எதிர்ப்பு – தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பதாக சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் தேசிய இணை பொதுச் செயலாளர் துரைசங்கர், சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சபரிமலை கோயிலில் பெண்கள் அனைவரையும் அனுமதிக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரிடமும் மனு அளிக்க உள்ளதாக அவர் கூறினார். மேலும், வரும் 12-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில், சபரிமலை கோயிலுக்கு செல்லப் போவதில்லை என பெண்கள் சத்தியப்பிராமணம் எடுக்கும் போராட்டம் நடைபெற உள்ளதாகவும் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜ நிர்வாகி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *