சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நல குறைவு ஏற்பட்டது. அவரது கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் செயல் இழந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி நடராஜனுக்கு மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை உள்ள குளோபல் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நடராஜன் சிகிச்சை பலனின்றி சற்று முன் உயிரிழந்தார்.