கல்வியை மாநிலப்பட்டியலில் சேர்த்தால், நவோதயா பள்ளிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை… விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் மீண்டும் வலியுறுத்தல்

கல்வியை மாநிலப்பட்டியலில் சேர்த்தால், நவோதயா பள்ளிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியாரின் 139-வது பிறந்த நாளையொட்டி, சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், கட்சி நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எழுச்சித் தமிழர், சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட வாழ்நாள் முழுவதும் போராடியவர் தந்தை பெரியார் என புகழாரம் சூட்டினார்.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்கும் உத்தரவை ஏற்க முடியாது எனவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னயில் வருகிற 21-ம் தேதி நடைபெறும் மாநில சுயாட்சி மாநாட்டில், மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் எனவும் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *