ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே மத்திய அரசின் லட்சியம் ; பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் விளக்கம்

ஏழை நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வை மேம்படுத்துவதே அரசின் லட்சியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற கம்பெனி செயலாளர்கள் பயிற்சி நிறுவனத்தின் பொன்விழா கொண்டாட்ட தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமர் நரேத்திரமோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஜி எஸ் டி அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று மாதங்கள் ஆன நிலையில் நடைமுறை சிக்கல்கள் கண்டறியப்பட்டு உள்ளதாகவும், அது தொடர்பாக தீர்வுகாணுமாறு ஜி எஸ் டி கவுன்சிலுக்கு தான் அறிவுறுத்தியிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். மேலும், நடுத்தர மற்றும் ஏழை மக்களின் கடின உழைப்பில் சேகரிக்கும் பணத்தின் மதிப்பை மத்திய அரசு நன்கு அறியும் என்றும் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்க்கை மேம்பாடைக் கருத்தில் கொண்டே மத்திய அரசின் கொள்கைகளும் திட்டங்களும் இருக்கும் என்றும் மோடி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *