ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த மூன்றாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப் படைகளுடன் புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டின் தென்பகுதியில் உள்ள சாடா மாகாணத்தில் ஹவுத்தி படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள சஹர் மாவட்டத்தில் பிரபல வணிக பகுதியில் உள்ள ஓட்டலின் மீது சவுதி அரேபியா நாட்டின் தலைமையிலான விமானப்படை நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 29 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பல கட்டடங்கள் தரைமட்டமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
2017-11-02