இந்தோனேசியாவில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த வெடிகள், வெடிப்பொருட்கள் வெடித்து சிதறியதால், அருகில் உள்ள இடங்களையும் தீ சூழ்ந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் உருவானது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு மற்றும் தீயணைப்பு குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *