இந்தியாவில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பாகிஸ்தான் உதவியுடன் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு நேபாளத்தில் புதிய கிளையை திறந்திருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகளை சேர்ப்பதற்காக அரசு சாரா இஸ்லாமிய தொண்டு நிறுவனம் என்ற போர்வையில் புதிய அமைப்பு பிரட்நகரில் தொடங்கப்பட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. அண்மையில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இரண்டு பேர் அங்கு சென்று வந்திருப்பதும் உளவுத்துறை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஏற்பாட்டில் காத்மண்டுவிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், நிதி உதவி மற்றும் ஆயுதங்கள் வழங்குவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதே போன்று வங்கதேச தலைநகர் டாக்காவிலுள்ள பாகிஸ்தான் தூதரக உதவியுடன் பயங்கரவாதிகளுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்க திட்மிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.