ஜம்மு காஷ்மீரில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ப்பட்டு கொலை செய்யப்பட்ட 8 வயது சிறுமி ஆஷிஃபாவுக்கு நீதி கிடைக்க போராட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஆஷிஃபா உங்கள் மகளாக இருந்திருந்தால்தான் உங்களால் புரிந்து கொள்ள முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆஷிஃபா தன் மகளாகவும் இருந்திருக்கலாம் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். ஆஷிஃபாவை பாதுகாக்கத் தவறியதில், ஒரு மனிதனாகவும், ஒரு தந்தையாகவும், ஒரு குடிமகனாகவும் கோபத்தை வெளிப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார். ஆஷிஃபாவுக்கு பாதுகாப்பை அளிக்கத் தவறிய இந்த நாட்டை மன்னித்து விடு மகளே என்று கமல்ஹாசன் மன்னிப்பு கோரியுள்ளார். குறைந்தபட்சம் இனிவரும் காலங்களில் ஆஷிஃபாவைப் போன்ற குழந்தைகளுக்கு நீதி கிடைக்க போராடப் போவதாக அவர் உறுதியளித்துள்ளார்.